follow the truth

follow the truth

June, 26, 2025
HomeTOP1நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை

Published on

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  வாக்குமூலம்...

பூஸ்ஸ சிறையில் கைதி தற்கொலை முயற்சி

பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் வைத்திருக்கும் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர், இன்று (26) பிற்பகல்...