எதிர்காலத்தில் 40க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படும் என்று விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகிறார்.
“நினைத்துக் கூட பார்க்காதவர்கள் மீது இப்போது வழக்குகள் தொடர ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 பேர் கொண்ட குழு இருப்பதாக விமல் வீரவன்ச கூறினார். 40க்கும் மேற்பட்டவர்கள் என நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். வீரவன்சவுக்குச் சொல்ல வேண்டும், வீரவன்சவும் அந்தக் குழுவில் இருக்கிறார்.”
நேற்று (26) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போதே பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்திருந்தார்.