இலங்கை போக்குவரத்து சபை உட்பட அனைத்து பயணிகள் பேருந்துகளின் சாரதிகளும், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டிகள் அணிவதை கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வீதி பாதுகாப்பில் சர்வதேச தரத்தைப் பேணுவதற்கான முயற்சியில் இது முக்கியமானது எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.