follow the truth

follow the truth

August, 26, 2025
HomeTOP2சிறையில் அடைக்கப்படுவது உறுதி - விமல் வீரவங்ச

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

Published on

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவர், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், ஒரு வர்த்தக நிலைய விற்பனை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறினார்.

இதற்கமைய, அந்த விசாரணை நீதிமன்ற வழக்குடன் நேரிடும் என்பதால் ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும், புதிய தேதியை ஆணைக்குழு விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிறைத்தண்டனை விதிக்கப்படும் சாத்தியமான சூழ்நிலைகளைப் பற்றியும் விமல் வீரவங்ச கருத்து வெளியிட்டார். கடந்த சிறைவாசத்தின் போது, இரண்டு புத்தகங்களை எழுதியதுடன், ஐந்து ஓவியங்களில் மூன்றை முடித்ததையும், இரண்டும் முழுமையடையவில்லை என்பதையும் அவர் பகிர்ந்தார்.

இதனால், மீண்டும் சிறையிலடைக்கப்பட்டால், அந்த நேரத்தையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...