குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 8 பேர் சிகிச்சைக்காக வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் இருக்கைக்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்ததாகவும், சாரதி அதைப் பிடிக்கச் சென்றபோது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.