இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை அடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.