அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் உபாலி பன்னிலகே இன்று தெரிவித்தார்.
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான தேசிய திட்டமான ‘பிரஜா சக்தி’யின் தொடக்க விழா குறித்து நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘பிரஜா சக்தி’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் தொடக்க விழா நாளை பிற்பகல் 2.00 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.