follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

Published on

கராச்சியில் அமைந்துள்ள ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் 15 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் அடங்குவதாகவும், மேலும் பலர் கீழே சிக்கியிருக்கும் வாய்ப்பு இருப்பதால், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடியில் 40க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக் கூடியவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தின் காரணங்கள் தற்போது வரை தெரியவில்லையெனினும், கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளாக பழமை வாய்ந்தது என்பதும், அது கட்டுமான நெறிமுறைகளை பின்பற்றியதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ரஷ்ய அமைச்சர் தற்கொலை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர்...

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...