follow the truth

follow the truth

July, 12, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

Published on

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

‘எனது தாய் மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்கு – தெளிவாக விளக்கமளித்தேன். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் மொழியை பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். தமிழ் மொழியை கொச்சப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர்.

நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலை பார்க்கும்போது அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பது தெரியும்.

தமிழ் மொழியில் பதிலளிக்கும்போது அந்த மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.” – என்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLMC கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முஷாரப் நியமனம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான...

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

செம்மணி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும்

சர்ச்சைக்குரிய விடயங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும்...