follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP1ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பின் மேம்பாட்டு திட்டம் முழுமையற்றது

ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பின் மேம்பாட்டு திட்டம் முழுமையற்றது

Published on

ரயில்வே சேவையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் 2020 நவம்பரில் நிறைவடைந்த ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை நவீனமயமாக்கும் திட்டம் எதிர்பார்த்தளவுக்கு திறம்பட செயல்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் ரயில்வே சேவையின் செயல்திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், திட்டத்தின் செயல்திறன் குறைவாக இருப்பதாகவும், திட்டத்தின் பலன்கள் முழுமையாக பெறப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்த பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், திட்ட செயலாக்கத்தில் பல பிழைகள் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

இதனை அடுத்து, ரயில்வே துறை எதிர்காலத்தில் இத்தகைய திட்டங்களை முழுமையான திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் செயலாக்கம் ஊடாக செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் எனக் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

06 மாத காலப்பகுதியில் 1,44,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்

2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு...

மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற தாய்லாந்து நாட்டுப் பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அம்பாறையில் உள்ள அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் அநாகரீகமான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தாய்லாந்து நாட்டைச்...

ஜூலையில் இதுவரை 79 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...