follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP1மஹியங்கனை அருகே விபத்து - கார் கால்வாயில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

மஹியங்கனை அருகே விபத்து – கார் கால்வாயில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

Published on

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனை 17 ஆவது மைல் தூணுக்கருகே அமைந்த வியானா கால்வாயில், மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவர் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

விபத்துத் தகவலைத் தொடர்ந்து, மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் அருகிலுள்ள பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

கவிழ்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக நோயாளர் காவு வண்டியில் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நேரத்தில் இருவரும் உயிரிழந்திருந்ததாக மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மேலும் விசாரணைகள் மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய...

இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் – செம்பிறைச் சங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள்’ குறித்து பாராளுமன்ற...

அமெரிக்கா தீர்வை வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா...