follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP1எரிபொருள் விலையில் பெரிய சலுகை? ரூ.50 வரியை அரசாங்கம் நீக்க நடவடிக்கையாம்

எரிபொருள் விலையில் பெரிய சலுகை? ரூ.50 வரியை அரசாங்கம் நீக்க நடவடிக்கையாம்

Published on

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வடைந்ததும், எரிபொருள் ஒன்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50 வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 22) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கத்தின் காலத்தில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரூ.884 பில்லியன் பெறுமதியான கடனை அரசுத் திறைசேரிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

அந்தக் கடனைச் சீர்செய்யும் நோக்கில் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு ரூ.50 வரி விதிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அந்தக் கடனின் அரைபங்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையும் தீர்வு காணப்பட்டதும், அந்த வரியை நீக்கும் வாய்ப்பை அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்...

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை செயற்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தற்போதைய பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய...

தேசிய குறைந்தபட்ச சம்பளம் (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி...