கம்போடியா-தாய்லாந்து எல்லையில் நிகழும் சமீபத்திய முரண்பாட்டு நிலைமைகளின் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புக்கள், பொதுமக்களின் இடம்பெயர்வுகள் மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் சேதமடைதல் குறித்து இலங்கை அரசு கவலை கொண்டுள்ளது.
அஹிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வை மையமாகக் கொண்ட புத்தரின் காலத்தால் அழியாத போதனைகளால் வழிநடத்தப்படும் தேசமொன்றான இலங்கை, இரு நாடுகளையும், ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டு நிலைமைகளை அமைதியாக தீர்க்கும் நோக்கில் ஆரம்பகட்ட இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுமாறு வலியுறுத்துகிறது.