follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடு3 வாரத்திற்குள் லாப் சிலிண்டர்களை விநியோகிக்க முடியும்

3 வாரத்திற்குள் லாப் சிலிண்டர்களை விநியோகிக்க முடியும்

Published on

துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களை விடுவித்தற்கு கடன் உறுதி பற்று பத்திரங்களை அரசாங்கம் பெற்றுத்தருவதாக இருந்தால் மூன்று வார காலத்திற்குள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என லாப் நிறுவனத்தின் தலைவர் டப்ள்யூ.கே.எச்.வேகபிடிய தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு கொள்வனவின் போது பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொள்வதால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் போது விலை சூத்திரத்திற்கமைய தேசிய மட்டத்தில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் மாதத்திலிருந்து நுகர்வோர் அதிகார சபையிடம் வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் அதற்கு இதுவரையில் அனுமதி கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

முன்னர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 40,000 முதல் 50,000 சிலிண்டர்களை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீதிமன்றம், தரநிலைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவை எரிவாயு நிரப்புதல் மற்றும் அதன்போது பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது எரிவாயு நிரப்புதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...