follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுமனைவியால் கோடரியால் தாக்கப்பட்ட கணவன் பலி!

மனைவியால் கோடரியால் தாக்கப்பட்ட கணவன் பலி!

Published on

மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று  காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கந்தலந்த குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன்போது, கோடரி ஒன்றினால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட மூன்று...

ஊழலுக்கு எதிரான பணிகளுக்காக இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜப்பான்

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத்...

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவித்தல்

சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளியின் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை...