follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடு20 அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட ஒரு பொதி 3998 ரூபாவுக்கு

20 அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட ஒரு பொதி 3998 ரூபாவுக்கு

Published on

20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை 3,998 ரூபாவுக்கு சதொச நிறுவனங்கள் ஊடாக பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

10 கிலோ சூப்பர் சம்பா
1 கிலோ வெள்ளைச்சீனி
1 கிலோ சிவப்பு பருப்பு
1 கிலோ இடியப்ப மா,
500 கிராம் நெத்தலி
400 கிராம் நூடில்ஸ்
400 கிராம் உப்பு
2 தேங்காய்ப்பால் பக்கெற் (330 மி.லீ.பக்கெற்)
100 கிராம் மிளகாய் தூள்
100 கிராம் மஞ்சள் தூள்
100 கிராம் STC தேயிலை
80 கிராம் பொடி லோஷன்
சதொச சந்தன சவர்க்காரம்
100 மி.லீ. கை கழுவும் திரவம்
90 கிராம் சோயா மீற்
சதொச TFM சலவை சவர்க்காரம்
பப்படம் 90 கிராம் என்பன இப்பொதியில் அடங்கியிருக்கும்.

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் இல்லாத பிரதேசங்களில் உள்ள மக்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது பொதிகளை வீடுகளுக்கு பெற முடியும் என அமைச்சர் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...