follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP19வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடர் இன்று

9வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடர் இன்று

Published on

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

பாராளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அமர்வுக்குப்பின், ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டது.

என்றாலும் கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாய ராஜபக்‌ஷ விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 18ஆம் திகதிவரை ஒத்திவைத்திருந்தார்.

இதற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அரசின் கொள்கைப்பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பார்.

அத்துடன் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைப்பதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இன்று ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்துக்கு வருவதற்கு முன்னர் காலை 09.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...