follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுகைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Published on

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த 13 மீனவர்களும் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் மூன்றாவது தவணையாக குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...

Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. Starlink...