follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுக.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

Published on

நேற்று (09) இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பாடம் தொடர்பான வினாத்தாள்கள் கையளிக்கும் வேளையில் இரண்டு பரீட்சை நிலையங்களின் மாணவர்கள் சிலர் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய , பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் கல்லூரி பரீட்சை நிலையத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்களிடமிருந்து க.பொ.த உயர்தரப் பரீட்சையின் கலைப் பரீட்சைக்கான வினாத்தாள்களை குறித்த நேரத்திற்கு முன்னதாக பெற்றுக்கொண்டதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, கம்பஹா தக்ஷிலா கல்லூரி பரீட்சை நிலையத்தின் இரண்டு மாணவர்களுக்கு கலை வினாத்தாளின் இரண்டாம் பாகம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் வலயக் கல்வி அலுவலகத்திலும் மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...

Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. Starlink...