follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுகொவிட் மரணங்கள் 15 வீதத்தால் அதிகரிப்பு

கொவிட் மரணங்கள் 15 வீதத்தால் அதிகரிப்பு

Published on

நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் மரணங்கள் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா நோய் அறிகுறிகள் தென்படாத பெருந்திரளானோர் சமுகத்தில் உள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிகாட்டுகின்றது.

மரண எண்ணிக்கையை நோக்கும்போது நோய் அறிகுறிகள் தென்படாத பெரும்பாலானோர் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவுவதுடன், பெரும்பாலானோருக்கு ஒமிக்ரோன் தொற்று இருந்தும் கூட அறிகுறிகள் தென்படாதுள்ளன. இவ்வாறானவர்கள் கூடுதலாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு நோய் அறிகுறிகள் தென்படாதவர்களினால் ஒமிக்ரோன் பரவுவதன் மூலம் தொடர்பை பேணியவர்கள் அவதான நிலையில் காணப்பட்டால் மரணத்தை கூட தழுவலாம். சமுகத்தில் நோய் அறிகுறிகள் தென்படாதவர்கள் கூடுதலாக உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...