follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுமக்கள் விடுதலை முன்னணி ஏற்படுத்திய கலவரங்களினால் பல இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர் - நாமல்

மக்கள் விடுதலை முன்னணி ஏற்படுத்திய கலவரங்களினால் பல இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர் – நாமல்

Published on

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற ஆளும்கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பேசிய அவர், இருதரப்பினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் விமர்சிப்பது எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கொள்கை என நாமல் ராஜபக்ஷ சாடினார்.

இந்த விடயத்தில் தமிழிழ விடுதலை புலிகளுக்கும்,மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பகாலத்தில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய கலவரங்களில் ஈடுப்பட்டமையினால் பல இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டதை மக்கள் இன்றும் மறக்கவில்லை என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...

Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. Starlink...