follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுபழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறும்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறும்

Published on

புதிய தேர்தல் முறை உருவாக்கப்படும் வரை பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென தேர்தல் முறைகள் மற்றும் தேர்தல் சட்டங்கள் தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான விசேட பாராளுமன்ற  தெரிவுக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை முன்வைக்க அந்த தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக, அந்தக் குழுவின் தலைவரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளாா்.

சகல தேர்தல் நடவடிக்கைகளின் போது தொகுதிவாரி அடிப்படையில் 60 வீதம், விகிதாசார முறையில் 40 வீதம் என்ற அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யவும் கலப்பு தேர்தல் முறையிலான அறிக்கையொன்றை முறைப்படுத்துவதற்கு விசேட தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளாா்.

அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை நிலைப்பாடுகளை உருவாக்குவதற்காக வெற்றிப்பெற்ற கட்சி அல்லது குழுவுக்கு மேலதிகமாக இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொடுக்கவும் பரிந்துரை முன்வைக்க கொள்கை அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு...

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...