follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1இன்று முதல் முழுமையான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பம்

இன்று முதல் முழுமையான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பம்

Published on

இன்று முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டின் நிலையினை கருத்திற்கொண்டு மாணவர்கள் இதுவரை குழுக்களாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று முதல் சகல மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பாடசாலைகளை நடத்த முடியாத சூழல் ஏற்படுமாயின் வலய கல்வி பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய அதிபர்களால் தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

மாதுறு ஓயா விபத்தில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்தார் இராணுவத் தளபதி

மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது...