follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுவிசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்!

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்!

Published on

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெறுவது மற்றும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 15 சிறப்பு சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த புதிய சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களுடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய தென் மாகாணத்தில் மிரிஸ்ஸ, நாரிகம ஆகிய இடங்களிலும் நுவரெலியா, பின்னவல மற்றும் எல்ல ஆகிய இடங்களிலும் இந்த விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இவை பிரதேச பொலிஸ் சுற்றுலாப் பணியகம் என பெயர் மாற்றப்படும் என சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...

Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. Starlink...