follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுதங்க நகைகள் கொள்ளையிட வந்த குழுவினரால் இருவர் கொலை

தங்க நகைகள் கொள்ளையிட வந்த குழுவினரால் இருவர் கொலை

Published on

சீதுவ மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் தங்கநகைகளை கொள்ளையிட வந்த குழுவினரால் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவ – முகலன்கமுவ பகுதியில் வீடொன்றிலிருந்த 73 வயதாக பெண்ணொருவர் நேற்று(16) கொலை செய்யப்பட்டுள்ளதுடன், உடைமைகள் மற்றும் தங்க நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மாலபே – தலஹேன பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த குழுவினர் மனைவியை கட்டிவைத்துவிட்டு கணவரை கொலை செய்துள்ளதுடன், தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இதன்போது 80 வயது முதியவர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...