follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஇரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றம்!

இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றம்!

Published on

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்விலிருந்து இரு  எம்.பி.க்களை  வெளியேற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளாா்.

குறித்த இரு எம்.பிக்களையும் சபையிலிருந்து  வெளியேற்றுவதற்கென  நாடாளுமன்ற அமர்வு மீண்டும் சிறிது நேரத்துக்கு  இடைநிறுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவருமே இவ்வாறு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்.

நாடாளுமன்ற அமர்வை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது சபாநாயகர் இந்த முடிவை அறிவித்தாா்.

சபை அமர்வுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையின் காரணமாகவே இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவதாக சபாநாயகர் சபையில் அறிவித்தாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து...