செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமாதிபுர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை செவனகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர். குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22,27,32 மற்றும் 35 வயதுடைய செவனகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இன்று எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.