follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழு கூட்டத்தை புறக்கணித்த எம்.பிக்கள்

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழு கூட்டத்தை புறக்கணித்த எம்.பிக்கள்

Published on

இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கயந்த கருணாதிலக்க, ஹெக்டர் அப்புஹாமி, சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே, ரோஹினி கவிரத்ன, காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட தரப்பினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மே தின கூட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளனர்.

மே தின பேரணியின்போது, சில நபர்களின் செயற்பாடுகள் குறித்து திரிபுபடுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...

Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. Starlink...