follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுமக்கள் பக்கம் நிற்பது யார், அரசாங்கத்துடன் யார் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்

மக்கள் பக்கம் நிற்பது யார், அரசாங்கத்துடன் யார் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்

Published on

பிரதி சபாநாயகர் தேர்வு வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த வேட்பாளரை ஆதரிப்பது மட்டுமே தனது ஒரே இலக்காக இருந்ததே தவிர மொட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரை ஆதரிப்பது அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

என்றாலும் இறுதியில் நடந்தது சுயேச்சை என்று கூறும் குழுவால் முன்மொழியப்பட்ட வேட்பாளரே மொட்டுவின் வேட்பாளராக மாறியது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுவின், பிரதமரைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொட்டுவின், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுவின் ஆதரவைப் பெற்ற ஒரு வேட்பாளருக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிபந்தனையின்றி மக்களுடன் முன்நிற்கும் தமது குழுவினரால் ஆடை அணிந்து வன்னம் மக்களுக்கு துரோகம் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் இறுதி சந்தர்ப்பமாக மக்கள் பக்கம் நிற்பது யார், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் யார் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவு

இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்...

DMT முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்த சம்பவம்...

நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வரும் GovPay வசதி

நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று...