இலங்கைக்கும் தாய்லாந்தின் பெங்கொங் நகருக்குமிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ‘தாய் ஸ்மைல்’ விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பெங்கொங் நகருக்கு வாராந்தம் 7 நாட்களுக்கு விமான பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹான் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏ 320 ரக விமானங்கள் இதற்காக பயன்படுத்தப்படுமெனவும், அதன் ஊடாக சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து அந்நியசெலாவணி அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.