follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுபிரதமரால் நியமிக்கப்பட்ட 4 விசேட குழுக்களின் அறிக்கை தயார்

பிரதமரால் நியமிக்கப்பட்ட 4 விசேட குழுக்களின் அறிக்கை தயார்

Published on

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரங்கள் மற்றும் பெற்றோலிய வளம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

அதன் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார கையொப்பமிட்ட அறிக்கையில், பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, நியமிக்கப்பட்டுள்ள குழுக்களுடன் ஆலோசிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் கூட்டமொன்றைக் கூட்டி ஏற்கனவே அதற்கான அறிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விரிவான செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் சாதகத்தன்மையை மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...