நாளாந்த எரிவாயு விநியோகத்தில் 60 வீதத்தை அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வழங்குமாறு லிட்ரோ நிறுவனத்துக்கு கோப் குழு பணிப்புரை விடுத்துள்ளது.
எரிவாயு விநியோகம் தாமதமடைந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.