தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேமிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், நாளாந்தம் பொதுமக்கள் அவற்றை விநியோகிக்குமாறு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் வலுசக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்க முடியாதெனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.