follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகுழந்தைக்கு விஷம் வைத்துக் கொன்ற இளம் தாய்! அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவம்!

குழந்தைக்கு விஷம் வைத்துக் கொன்ற இளம் தாய்! அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவம்!

Published on

தனது 9 மாத குழந்தைக்கு இளம் தாயொருவர் விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவமொன்று அக்குரஸ்ஸவினை அண்டிய கிராமப்பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தந்தை தொழிலுக்காக வெளியில் சென்றிருந்த தருணமே குறித்த கொலை இடம்பெற்றிருப்பதாகவும், உயிரிழந்த குழந்தை கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த வீரதுங்க ஆராச்சிகே பசிது பிரபாத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாலிம்படை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அயலவர்களினால் குறித்த குழந்தை முச்சக்கரவண்டியில் அக்குரஸ்ஸ அரச வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு விஷம் கலந்த ஏதேனும் கொடுத்துவிட்டு தாய் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 22 வயதான குறித்த தாய்க்கு 3 வயதில் இன்னொரு குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்த குழந்தையின் மரணம் குறித்து திடீர் மரண விசாரணைகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...