follow the truth

follow the truth

June, 2, 2025
Homeஉள்நாடுஜப்பானிடமிருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவி

ஜப்பானிடமிருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவி

Published on

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் அவருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தனது நிர்வாக காலத்திலும் தற்போதும் மேம்படுத்துவதற்கு ஜப்பான்  காட்டிய அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

மேலும், இலங்கைக்கு தேவையான மருந்துகள் குறித்து தாம் முன்னதாக ஜப்பானிய தூதரகத்திற்கு அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்நிலையில், இம்மாதத்தில் ஜப்பானிய அரசாங்கத்தினூடாக 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்க தயாராக இருப்பதாக ஜப்பானிய தூதுவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக – “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான...

லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர்...

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31...