ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 48 வீதமான கட்டில்களை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக இதுவரையில் 16 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,300 கட்டில்கள் மாத்திரம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர், வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.