follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஒன்பது அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்

ஒன்பது அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்

Published on

ஒன்பது அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர திசாநாயக்க, கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சரத் வீரசேகர, அருந்திக்க பர்னாந்து மற்றும் மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு கபீர் ஹஷீம், ஹர்ஷ த சில்வா, கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான மற்றும் ரஞ்சித் பண்டார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள்ளனர்.

அதேபோன்று, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானசேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு திஸ்ஸ அத்தநாயக்க, பிரமித்த பண்டார தென்னகோன், கே. காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு கபீர் ஹஷீம், கௌரவ திலும் அமுனுகம,கனக ஹேரத், அசோக அபேசிங்ஹ மற்றும் லலித் வர்ண குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு இம்தியாஸ் பாகிர் மாகார், சாந்த பண்டார, கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, எஸ்.எம். மரிக்கார் மற்றும் சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, சிவஞானம் சிறீதரன், உதயகாந்த குணதிலக்க, குலசிங்கம் திலீபன் மற்றும் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு தலதா அதுகோரல, எச்.எம்.எம். ஹரீஸ், சிசிர ஜயகொடி, ஜீ.ஜீ. பொன்னம்பலம் மற்றும் அனுப பஸ்குவல் ஆகிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ துமிந்த திசாநாயக்க, கபீர் ஹஷீம், நலீன் பண்டார ஜயமஹ மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு ஜோன் செனவிரத்ன, வடிவேல் சுரேஷ், கௌரவ டீ. பி. ஹேரத், வேலு குமார் மற்றும் ஜயந்த வீரசிங்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...