follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுகுழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை!

குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை!

Published on

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக நன்கொடையாளர்களிடம் உதவி கோரப்படுவதாக மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சந்துஷ் சேனாபதி தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் உணவில் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை போதுமான அளவு சேர்ப்பதில் தற்போது குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், முட்டைக்கு பதிலாக உலர் பழங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பொருட்களின் விலையேற்றத்துடன் விநியோகஸ்தர்கள் விநியோகத்தை குறைத்துள்ளதாலும், நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் உதவிகள் குறைந்து வருவதாலும் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் நன்கொடையாளர்களின் உதவி தேவைப்படுவதாகவும், அதனால் பங்களிக்க கூடியவர்கள் இருப்பின் வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...