follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுசீரற்ற காலநிலை காரணமாக 10,000 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 10,000 பேர் பாதிப்பு!

Published on

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2729 குடும்பங்களைச் சேர்ந்த 10,885 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 02 பேர் காயமடைந்துள்ளனர்.

69 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் 09 தற்காலிக பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  வாக்குமூலம்...

பூஸ்ஸ சிறையில் கைதி தற்கொலை முயற்சி

பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் வைத்திருக்கும் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர், இன்று (26) பிற்பகல்...