follow the truth

follow the truth

June, 23, 2025
Homeஉள்நாடுரயில் பயணசீட்டுகளுக்கான முன்பதிவு கால அவகாசத்தில் திருத்தம்

ரயில் பயணசீட்டுகளுக்கான முன்பதிவு கால அவகாசத்தில் திருத்தம்

Published on

ரயில் பயணசீட்டை முன்பதிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தில் இலங்கை ரயில்வே திணைக்களம் திருத்தம் செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே திணைக்களம், பயணிகள் தங்கள் பயணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னதாக தங்களது ரயில் பயணசீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்திற்கு 14 நாட்களுக்கு முன்பு மட்டுமே பயணசீட்டு முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், செப்டம்பர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் அக்டோபர் 13 ஆம் திகதி வரை பயணிகள் தங்கள் பயணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னதாக பயணசீட்டுக்களை முன்பதிவு செய்யலாம்.

பயணிகளின் அதிக தேவை காரணமாக இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை...

இஸ்ரேலில் உள்ள 5 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்ப கோரிக்கை

இஸ்ரேலில் தொழில்புரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுவரையில்...

கோரிக்கைகளைத் தொடர்ந்து பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவுக் கட்டணம் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர்...