follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉள்நாடுநிவாரணத்திற்கு பதிலாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது!

நிவாரணத்திற்கு பதிலாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது!

Published on

இன்று தாங்க முடியாத அளவு மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் பீடனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

குறிப்பாக மதத் தலைவர்கள் குழுவொன்று தான்னைச் சந்தித்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் மதஸ்தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பாரதூரமானது எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு வக்குரோத்து நிலையிலுள்ள போதும், அதனை முறையாகவும் திட்டமிட்டுச் செய்தால் இந்நாட்டின் அத்தியாவசியமான துறைகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மூலங்களைப் பெறுவதற்கு சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் இது தொடர்பாக அரசாங்கத்திடம் எந்த வித வேலைத்திடமும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மாறாக, அரசாங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை விமர்சித்து வருவதாகவும்
அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில்,மக்கள் சார், மக்களை மையமாகக் கொண்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வழங்க முடியுமான நிவாரணத்தைக் கூட வழங்காமல் மக்கள் மீது சுமையை ஏற்றுவது தான் இன்று நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...

தாதியர் சேவைக்காக 3147 புதிய தாதியர்கள் நாளை நியமனம்

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நாளை(24) சனிக்கிழமை காலை அலரி...

சமிந்த விஜேசிறி இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இது...