follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுபாண் விலை குறித்த முக்கிய அறிவிப்பு

பாண் விலை குறித்த முக்கிய அறிவிப்பு

Published on

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன, இன்று (04) தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் முன்னணி கோதுமைமா இறக்குமதி நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு கிலோ கோதுமை மா, 270 ரூபாய் முதல் 283 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை பேக்கரி பொருட்களின் விலை 400% அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், பேக்கரி உரிமையாளர்களுக்கு பெறுமதிசேர் வரியை அரசாங்கம் விதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.

கோதுமை மாவின் விலையை குறைக்கும் வாக்குறுதியை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கோதுமைமாவின் விலையை 250 ரூபாயால் குறைக்கவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...