follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடு6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தாத 73,000 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தாத 73,000 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

Published on

ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தைச் செலுத்தாத சுமார் 73 ஆயிரம் நுகர்வோருக்கு நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணங்களைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி ஊடாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதன் பின் சுமார் 100 வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகை 145 கோடி ரூபாவாகும். எனினும் நுகர்வோர் தமது பட்டியல் கொடுப்பனவைச் செலுத்தாததால் சபை 800 கோடி ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது...