follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1பந்துலவிடம் சிஜடி 4 மணிநேர வாக்குமூலம்

பந்துலவிடம் சிஜடி 4 மணிநேர வாக்குமூலம்

Published on

சதோச நிறுவனத்தில், இரண்டு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 4 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பிலும் வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் அமைச்சர் பந்துலகுணவர்தன, காவல்துறைமா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர், ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் உள்ளிட்ட முழுமையான ஆதாரங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர் பந்துலகுணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...