follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2எதிர்க்கட்சி கூட்டணி குறித்து இரகசிய பேச்சுவார்த்தை

எதிர்க்கட்சி கூட்டணி குறித்து இரகசிய பேச்சுவார்த்தை

Published on

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பரந்த கூட்டணி தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்காக நியமிக்கப்பட்ட குழு இது தொடர்பான முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததாக உத்தர லங்கா கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“.. உள்ளூராட்சி தேர்தல் என்பது பொதுமக்களின் உரிமையாகும். அதனை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்குமானால் அது தோல்வியில் முடியும் முயற்சி என்பதோடு, எதிர்க்கட்சி உடனான கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருகிறோம்.. இந்த குழுவின் ஏகமனதான ஒரு நிபந்தனை தான் எச்சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடல்கள் முழுமை பெரும் வரையில் அது தொடர்பில் கதைக்கக்கூடாது என்பது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...