follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP2'இருள் மறையும் வெற்றிக்கான பாதையாக அமையட்டும்'

‘இருள் மறையும் வெற்றிக்கான பாதையாக அமையட்டும்’

Published on

பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், இருள் மறையும் வெற்றிக்கான பாதையை தெளிவுபடுத்தும் தீர்க்கமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய பிரார்த்திப்போம்.

ஒரு நாடாக கடந்த வருடம் முழுவதும் கேட்ட மற்றும் எதிர்கொண்ட பல செய்திகள் நல்லதை விட கெட்டவையாகவே இருந்தன. தூர நோக்கு இல்லாத ஆட்சி முறையால் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைமைக்கு ஆளாகிய படுமோசமான ஆண்டாகவும்,இந்த நாட்டில் பொதுமக்களின் தீர்க்கமான வெற்றி எழுச்சிக்கான தனித்துவமான ஆண்டாகவும் 2022 ஆம் ஆண்டை குறிப்பிட முடியும். இந்த உன்னத எழுச்சிக்கு நாமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

ஒரு நாடாக, நாம் பல சவால்களுடன் 2023 ஆம் ஆண்டை எதிர்கொள்கிறோம் நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தம்.

எனவே, நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லக்கூடிய மற்றும் கொண்டு செல்ல வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி புதிதாக நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு நாட்டின் உந்து சக்தி மக்களின் இறையாண்மை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்து அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...