follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2"தங்களின் பணி 8 மணி நேரம் மட்டும் அல்ல"

“தங்களின் பணி 8 மணி நேரம் மட்டும் அல்ல”

Published on

அரச உத்தியோகத்தர்களின் பணியானது வாரத்தில் எட்டு மணித்தியாலங்கள் அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படாது, அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டில் சாதாரண நிலைமையை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் புதிய வருடத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வெற்றிகரமாக செயற்பட வேண்டும். இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.கடந்த ஆண்டை விட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை ஒரு பொறிமுறையாகவே பார்க்கின்றோம்.அவை அமைச்சுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்படவில்லை. ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்கள். பகுதிகளுக்கு இடையே போட்டியோ, இழுபறியோ இருக்க முடியாது.அவர்கள் தங்கள் பொறுப்பை மட்டுப்படுத்த முடியாது.நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை அமுல்படுத்த அனைவரும் கட்டுப்பட்டவர்கள்.

இதன் மையம் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை அலுவலகம் ஆகும். இப்படித்தான் முன்னோக்கி செல்கிறது. எனவே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தங்களின் பணி எட்டு மணி நேரம் மட்டும் அல்ல. தங்களின் பணி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அல்ல. கடினமாக உழைத்து இயல்பு நிலையை உருவாக்குவோம். அனைவரின் ஆதரவுடன் நாட்டை முன்னேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...