follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசேபாலின் கதை குறித்து தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் வாக்குமூலம்

சேபாலின் கதை குறித்து தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் வாக்குமூலம்

Published on

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சேபால் அமரசிங்கவிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று (09) காலை வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டது.

அண்மையில் சேபால் அமரசிங்க என்ற நபர் பௌத்தர்களின் மணிமகுடமான ஸ்ரீ தலதாவை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்படி பொலிஸ் மா அதிபருக்கு பல தரப்பினரிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகளின் பின்னர் கடந்த 5 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை (10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அத்துடன், குருநாகல், பொத்துஹெற , அஹுகுடாவில் அமைந்துள்ள போலி தலதா மாளிகையின் ஸ்தாபகர் ஜனக சேனாதிபதியிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

சுமார் 5 மணி நேரம் விசாரணை அதிகாரிகள் அங்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...