follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுசேபாலின் கதை குறித்து தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் வாக்குமூலம்

சேபாலின் கதை குறித்து தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் வாக்குமூலம்

Published on

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சேபால் அமரசிங்கவிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று (09) காலை வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டது.

அண்மையில் சேபால் அமரசிங்க என்ற நபர் பௌத்தர்களின் மணிமகுடமான ஸ்ரீ தலதாவை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்படி பொலிஸ் மா அதிபருக்கு பல தரப்பினரிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகளின் பின்னர் கடந்த 5 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை (10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அத்துடன், குருநாகல், பொத்துஹெற , அஹுகுடாவில் அமைந்துள்ள போலி தலதா மாளிகையின் ஸ்தாபகர் ஜனக சேனாதிபதியிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

சுமார் 5 மணி நேரம் விசாரணை அதிகாரிகள் அங்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...