follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉலகம்விமான விபத்தையடுத்து நேபாளத்திற்கு இன்று துக்கம் அனுசரிப்பு

விமான விபத்தையடுத்து நேபாளத்திற்கு இன்று துக்கம் அனுசரிப்பு

Published on

காத்மாண்டுவில் இருந்து நேபாளத்தின் பொக்காரா நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், நேபாள அரசால் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 72 பேருடன் சென்ற விமானம் நேற்று காத்மாண்டு விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் பயணித்த 68 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல் போன 4 பேரை தேடும் பணியில் நிவாரணப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் சுமார் 300 உதவிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தின் இடிபாடுகளில் எவரும் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்று தேடுவதுடன், உடல் உறுப்புகளையும் தேடி வருகின்றனர்.

விமானம் விழுந்து நொறுங்கியபோது வீடுகள் மீது விழுந்து விடாமல் தடுக்க விமானி கடுமையாக முயன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். விமான விபத்தையடுத்து, நேபாளத்தில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் 27 – செப்டம்பர் 10 ஆகிய நாட்கள் தீர்மானமிக்கவை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரண்டு...

தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக...

தாய்வான் பாராளுமன்றத்தில் அடிதடி

தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின்...