follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஅட்டைகளுக்கு பற்றாக்குறை - ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

அட்டைகளுக்கு பற்றாக்குறை – ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

Published on

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தற்போது நிலவும் தட்டுப்பாடு நீக்கப்படும் வரை தேசிய அடையாள அட்டை விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை மாத்திரமே ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் எனவும் இவ்வாறு வழங்கப்பட்ட ஆவணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...